மந்திர வழிபாட்டு ரகசியங்கள் | World secrets manthiram


நீங்க எத்தனை கோடி கொடுத்தாலும், ஒரு சில விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற விதி இருந்தால் மட்டுமே, உங்களுக்கு அது தெரிய வரும். அந்த வகையில், சில அபூர்வ மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் – உங்களுக்கு அளப்பரிய ஆற்றல் கிடைக்க வாய்ப்புள்ளது.நம்பிக்கையுடன் , நீங்கள் செய்து வாருங்கள். செய்து வரும் காலத்திலேயே 

உங்களை சுற்றி நடக்கும் , மாற்றங்களை உணர முடியும்.

மகாலட்சுமியுடன் திருப்பாற்கடலில் தோன்றியது சங்கு.கடலில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் வலம்புரிச்சங்கு ஓங்கார ஒலியெழுப்பும். சாதாரணச் சங்கில் ஓம்கார ஒலி உள்ளடங்கியிருக்கு ம். சங்கொலி துர்ஆவிகளை விரட்டும். சங்கு ப்பக்கம் துர்ஆவிகள் வராது. அதனால், குழந்தைகளுக்குக் கூட சங்கில் பால் ஊற்றிப்பு கட்டுவர்.

மனித மண்டை ஒட்டுப்பூஜையும், சங்குப்பூஜையும் ஒன்றுதான். மண்டை ஓடு காளிக்குரியது.இது சத்ரு சம்ஹாரம் செய்யும். சங்கு லட்சுமிக்குரியது. சங்கு பூஜை செய்து வந்தால்,தன ஆகர்ஷணம் (பண வரவு பல மடங்கு அதிகரித்தல்) ஆகும்.

சங்கு காயத்ரி மூலம் பிற உலகத்துடன் சூட்சுமத் தொ டர்பு கொண்டுள்ளனர். இப்போதும், தமிழ் நாட்டில் மிகச் சில இடங்களில் இந்தத் தொடர்பு இருக்கிறது. சங்கினைப் பயன்படுத் தாத நேரத்தில், வெள்ளிப்பாத்திரத்தி ல்,சுத்தமான நீரில் மூழ்க வைத்திருக்க வேண்டும். உபயோகிக்கும்போது அதை எடுத்து, தூய துணியினால் நன்கு துடைத்து விட்டு, அதற்கு சாம் பிராணி புகைக் காட்ட வேண்டும்.

தமிழ்நாட்டில் முற்காலத்தில் துறவிகள் கர்ண எட்சிணி மற்றும் கர்ண பைரவர் மந்திரங்களை ஜபித்துள்ள னர். அது துறவிகளின் உடற் கூறைப் பொ றுத்து  வலது காதிலோ அல்லது இடது காதி லோ முக் காலமும் உரைக்கும். மனதால் கேள்வி கேட்க,கேட்க, பதில் சொல்லிக் கொண்டே இருக்கும்.

வடநாட்டில் சப்தாகர்ஷிணி என்னும் பெண் தேவதை மந்திரம்சொல்லி அருள்வாக்கு, ஜோதிடம், கைரேகை, பிரசன்னம் என பல தொழில் செய்கின்றனர். சப்தாகர்ஷிணிக்கு ரூபம் கிடையாது.மந்திரம் மட்டும் உண்டு. அடிக்கடி பால் சாதம் ,வாழைப்பழம் சாப்பிட்டு வர சித்தியாகும். காதி ல் கனகபுஷ்பராகம் கடுக்கண் அணிவது ஒரு பிளஸ் பாய்ண்ட், பழைய வித்வத்கள் அனைவரும் கடுக்கண் அணிவர் இதற்குத்தான்.

நமது உடலை மந்திர உடலாக மாற்றிட வேண்டும். மனம் விருப்பு வெறுப்பின்றி இருந்தால் தான் செய்திகளை தூய மனதில் எளிதில் பெறலாம். ஒரு லட்சம் தடவை சப்தாகர்ஷிணி மந்திரம் ஜபிக்க வேண்டும்.பின்,உங்களின் கைக்கு அடக்கமான வெண்மை யான சங்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் குரு அம்சம் எனில் வலது காதில் சங்கை வைத்து சப்தாகர்ஷிணி மந்திரம் தினமும் 108 முறையும், நீங்க ள் சுக்கிர அம்சம் எனில் இடதுகாதில் சங்கை வைத்து சப்தாகர்ஷிணி மந்திர ம் தினமும் 108 முறையும், அந்த ஒரு லட்சத்துக்குமேல் ஜபித்து வர வேண்டும். சங்கின் கீழ்ப்பகுதியி காதின் கீழ் மடலில் பொருத்தப் பிடித்துக் கொள்ள வேண்டும்.சங்கில் நல்லதேவதை தான் பேசும்.

சப்தாகர்ஷிணி மந்திரம்:

ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய
சப்தாகர்ஷணி ஆகர்ஷய ஆகர்ஷய
வா வா ஸ்வாஹா

இந்தப் பயிற்சியை 21 வயது நிரம்பிய வர்கள் தான் செய்ய வேண்டும். எந்த மதத்தைச் சேர்ந்தவரும் செய்யலாம். பெண்கள் மாதஓய்வு நாட்களில் 5 நாட் கள் நிறுத்தவும். அனைவரும் அசைவ ம்,மது நிரந்தரமாக நிறுத்திவிட வேண்டும். இந்தப்பயிற்சிக்கு தனி அறை அவசியம். இயலா விட்டால், அந்த வீட்டிலிருப்பவர்கள் அனை வரும் மது, மாமிசம், முட்டை தொடக்கூடாது.இது கட்டாயம்!!!

எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு. நீல எருக்கு, ராம எருக்கு என 9 வகையான எருக்குகள் இருக்கி ன்றன என சித்த வைத்தியர்கள் கூறுகின்றனர். எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட,சூரிய ஒளியி லுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது. அதன் பருவ காலத்தில் பூத்து, காய்த்து, வளர்ந்துவிடும். இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு.இதை வீட் டிலும் வளர்க்கலாம். இதன் பூவை வைத்து விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம்.வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்ம மாக்கப் பயன்படுகிறது. வெள்ளெரு க்கு பட்டையை நூலுக்குப் பதில் விளக்குத் திரியாக போட்டு வீட்டில் எரிக்க சகல பூதங் களும் விலகி ஓடும்.வெள்ளெருக்கு வட வேரில் மணிமாலை செய்யலாம். விநாய கர் செய்து வழிபடலாம். ஆகர்ஷண ம் எட்டு வகைப்படும். இதில் தன ஆகர்ஷணம் பண வரவை அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர்.

வெள்ளெருக்கு விநாயகர் என பல இடங்களில் விற்பனை செய்கிறார்கள். வேர்ப்பகுதிக்குபதில் தண்டுப்பகுதியில் விநாயகர் செய்து விற்கிறார்கள். அதனால், அது விரைவில் உளுத்துப் போய் உதிர்ந்து விடுகிறது. தரமான விநாயகர் பிள்ளையார் பட்டியிலும், சூரியனார் கோவிலிலும் கிடைப்பதாக க் கூறுகின்றனர்.

அங்கு போக முடியாதவர்கள், உங்களுக்கு நம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலமாக வெள்ளெருக்கு செடியை அடையாளம் கண்டு, அதன் வேரை எடுத்து உள்ளூர் ஆசாரியை வைத்து வெள்ளெருக்கு விநாயகர் செய்து கொள்ளவும்.ஒரு வெள்ளிக் கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் ராகு காலத்தில்,அதற்கு அரைத்த மஞ்சள் கலவையைத் தடவவும்.அதற்கு அடுத்த வெள்ளிக் கிழமை காலை 10.30 முதல் 12க்குள் ராகு காலத்தில் சந்தனம் அரைத்த கலவையை அதன்மேல் தடவி, நிழலில் காய வைக்கவும். இப்பொழுது அதன் கதிர்வீச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு, நன்மையான கதிர்கள் நம் வீட்டில் பரவும்படி தயார் செய்து விட்டோம். இனி,அவரவர் இ ஷ்டம் போல வழிபாடு செய்யலாம்; தூப தீப நைவேத்தியம் செய்யலாம்; ஸ்ரீ சொர்ணகணபதி மந்திரம் சொல் லி ,வெள்ளெருக்கு விநாயகரை வழி பட்டால்,தன ஆகர்ஷணம் உண்டாகு ம். (ஆமாம்,பண வரவு பல மடங்காக அதிகரிக்கும்) சொர்ண கணபதி மந்திரம் அருகிலுள்ள சிவாச்சாரியா ரிடம் அணுகி, அடிபணிந்து தெரிந்துகொள்ளுங்கள் 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Best astrologers in salem - Famous Astrologers in salem - Astrology Experts..

Murugu Astrology Centre offers various services in Astrology, Marriage matching, Vedic Astrology, Astrology Reading, Psychic Readings, Dash...